ஞாயிறு, 29 ஜனவரி, 2017

அடக்குமுறை


அடக்குமுறைக்கு ஆயுள் குறைவு என்பது
அகிலம் அறிந்த .உண்மை.
அன்று மன்னராட்சியில் அடக்குமுறை .
இன்று  மக்கள் ஆட்சியிலும் அடக்குமுறை.
உண்மைகள் உணர்த்தப்பட்டாலும்
மனித மனம் நம்ப மறுக்கத்தான் செய்கிறது.
வ்ரலாறு படைக்கப்பட்டாலும்
வன்முறைகள் தூண்டப்படத்தான் செய்கின்றன.
வரலாற்றை திரும்பிப் பார்த்தால்
அடக்குமுறையாளர்களின் அடிமனதில்
ஆழமான பயமே தெரிகிறது. இது
அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் .
இப்போது வந்துள்ள டிரம்ப் காலம் வரை.
இனி வரும் காலங்களிலும் தொடரும்
என்ற உண்மையை உணர்ந்தே
செயல் பட வேண்டும்.
மெரீனா தந்த வெற்றியை அங்கே
காளைக்கு சிலை அமைத்து
காலமெல்லாம் கொண்டாட வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக