செவ்வாய், 24 ஜனவரி, 2017

பரணி பாட வேண்டும்

ஏன் அடித்தாய் எங்களை நீ!
யார் சொல்லி அடித்தாய் நீ ?
சட்டம் உம்  கையில்
சர்வதிகாரம் உம்  கையில்
என்று எண்ணி நீயும்
இங்கு எம்மை அடித்தாயோ?

தமிழ் வழிப் போர்க்கண்டு
தரணியே வியக்கையிலே
தடியடி நடத்தி நீயும்
தரம் கெட்டு போனதுமேன் ?

பாரை  வியக்க வைத்து
பார் போரை  அதிரவைத்த
பைந்தமிழ் சொந்தங்களே -உம்புகழலை
பரணி பாட வேண்டும் என்பேன் !

யாரும் பாடலாம். நானும் முயன்றிடுவேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக