- அக்னி சிறகொன்று கண்டேன்!- அது
- அரியணை ஏறிய அதிசயம் கண்டேன்!
- செக்கினை சிதம்பரத்தில் கண்டேன்!- இவன்
- சிந்தையில் நானந்த சிவனையே கண்டேன்!
- கொக்கினை குளக்கரையில் கண்டேன்!- அதன்
- கூர்நாசி கூர்மையைஇவன் பார்வையில் கண்டேன்!
- எக்கினை இரும்பினுள் கண்டேன்! -இவன்
- எண்ண வலிமையை அதனுடன் வைத்தேன்!
- மொக்கது மலராகக் கண்டேன்!- இவன்
- முயற்சியும் திருவினை யாகவே கண்டேன்!
- பொக்ரானில் பாதாளம் கண்டேன்!-இவன்
- பொலிவுடன் நின்றிருந்த காட்சியும் கண்டேன்!
- சிக்கனத்தை சிறுவயது முதலே - இவன்
- செலவழித்த செய்திகளை செவிவழியே கேட்டேன்!
- இக்கணமும் கடைபிடிக்க கண்டேன்! - இந்த
- இறையன்பன் இயற்பண்பை இமயத்துடன் வைத்தேன்!
- சக்தியுள் சிவனைநான் கண்டேன் !-இந்த
- சந்நியாசி உள்ளத்தில் சமத்துவத்தை கண்டேன்!
- சுக்கினுள் மருந்துண்டு கண்டேன்! -இந்த
- சுல்தானின் உள்ளத்தில் விருந்தோம்பல் கண்டேன்!
- சுக்கிரனை சோதிடத்தில் கண்டேன்!-இந்த
- சுந்தரனின் சாதகத்தை அவன்கணிக்க கண்டேன்!
- வக்கிரங்கள் வளர்ந்துவர கண்டேன்! - இந்த
- வாத்தியாரின் வழிகாட்டல் வேண்டுமெனக் கண்டேன்!
- வாக்களிக்க கேட்டிருக்க கண்டேன்! - இவன்
- வாக்கில் சுத்தமது வீற்றிருக்க கண்டேன்!
- சொக்கனிடம் ராமன்வேண்ட கண்டேன்! - அந்த
- சொந்தமண்ணில் இவன்வீட்டின் எளிமையையும் கண்டேன்!
- கடைகோடி தமிழனிவன் கண்டேன்!-அன்று
- குடியரசு தலைவரான காட்சியையும் கண்டேன்!
- உடைமாறிப் போனதை கண்டேன்! - ஆனால்
- உள்ளத்தில் மாற்றமில்லை உண்மையாய் கண்டேன்!
- செய்தியாளர் சந்திப்பு கண்டேன்!- இவன்
- சிறிதுநேரம் தரையமர்ந்து இளைப்பாறக் கண்டேன்!
- பொய்யான மரபுடையக் கண்டேன்!- அவர்க்கு
- பொறுப்புணர்வு வேண்டுமென இவன்வுரைகக் கண்டேன்!
- கனவுகள் காணசொன்ன கவிஞன்! - இன்றும்
- கல்விதனை போதிக்கும் கடமையுள்ள ஆசான்!
- இனமான எங்கள் தமிழ்மகனை - இந்த
- இந்தியத்தாய் சுவீகாரம் செய்துகொண்டு விட்டாள்
- பிறைசூடன் குடிகொண்ட பூமி - அந்த
- பிறைநிலவே இவன் இல்ல பிரியமான சாமி!
- கறைபடியா கைகள்கொண்ட மனிதன் - நாம்
- கவலை இன்றிவாழ்வதற்கு கனவுகாணும் புனிதன்!
- இணையில்லா எங்கள் உள்ளக்கள்வன் - இவன்
- இளைஞர்களின் உள்ளத்தில் எந்நாளும் முதல்வன்!
- துணையில்லா தூயத்தமிழ் பிள்ளை - இவன்
- துணிவான கனவிற்கு வானமே எல்லை!
- பலகாலம் இவன்வாழ வேண்டும்! - இந்த
- பாரதமே இவனாலே பயனடைய வேண்டும்!
- உலகையே நாமால வேண்டும்! - இந்த
- உத்தமனின் கனவெல்லாம் நனவாக வேண்டும்!
- எமனோடு போராட வேண்டும்! - இவன்
- இன்னுயிரை எடுப்பதற்கு தடைபோட வேண்டும்!
- சமதர்மம் பேணுகின்ற பெருமான் - இவன்
- சபைதனிலே நாயகனாய் மீண்டும் வரவேண்டும்!
- கடல்சூழ்ந்த ராமேஸ்வரம் ஊராம்! - அப்துல்
- கலாம் என்பதிவ னுடைய பேராம்!
- மடலெழுத வார்த்தையில்லை பெண்ணே! - இந்த
- மாமனிதன் பேர்சொன்னால் மதிப்புவரும் முன்னே!
எழுத்து பிழைகள் பொறுக்க.
மணிவேல்