கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ரங்கராஜன் | |
---|---|
![]() |
|
பிறப்பு | எஸ். ரங்கராஜன் மே 3, 1935 திருவல்லிக்கேணி, சென்னை, இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 27, 2008 (அகவை 72) சென்னை, இந்தியா |
புனைப்பெயர் | சுஜாதா |
தொழில் | பொறியாளர், எழுத்தாளர் |
நாடு | இந்தியர் |
துணைவர்(கள்) | சுஜாதா ரங்கராஜன் |
பிள்ளைகள் | கேசவா பிரசாத், ரங்கா பிரசாத் |
http://www.writersujatha.com |
பொருளடக்கம்
வாழ்க்கைக் குறிப்பு
சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
புனைபெயர்
இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.ஆக்கங்கள்
சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.புதினங்கள்
- பதவிக்காக
- ஆதலினால் காதல் செய்வீர்
- பிரிவோம் சந்திப்போம் (நூல்)
- அனிதாவின் காதல்கள்
- எப்போதும் பெண்
- என் இனிய இயந்திரா
- மீண்டும் ஜீனோ
- நிலா நிழல்
- ஆ..!
- கரையெல்லாம் செண்பகப்பூ
- யவனிகா
- கொலையுதிர்காலம்
- வஸந்த்!வஸந்த்!
- ஆயிரத்தில் இருவர்
- ப்ரியா
- நைலான் கயிறு
- ஒரு நடுப்பகல் மரணம்
- மூன்று நிமிஷம் கணேஷ்
- காயத்ரி
- கணேஷ் x வஸந்த்
- அப்ஸரா
- மறுபடியும் கணேஷ்
- விபரீதக் கோட்பாடு
- அனிதா இளம் மனைவி
- பாதிராஜ்யம்
- 24 ரூபாய் தீவு
- வசந்தகாலக் குற்றங்கள்
- வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
- கனவுத்தொழிற்சாலை
- ரத்தம் ஒரே நிறம்
- மேகத்தைத் துரத்தினவன்
- நிர்வாண நகரம்
- வைரம் (புதினம்)
- ஜன்னல் மலர்
- மேற்கே ஒரு குற்றம்
- உன்னைக் கண்ட நேரமெல்லாம்
- நில்லுங்கள் ராஜாவே
- எதையும் ஒருமுறை
- செப்டம்பர் பலி
- ஹாஸ்டல் தினங்கள்
- ஒருத்தி நினைக்கையிலே
- ஏறக்குறைய சொர்க்கம்
- என்றாவது ஒரு நாள்
- நில் கவனி தாக்கு
- காந்தளூர் வசந்தகுமாரன் கதை
- பெண் இயந்திரம்
- சில்வியா
- பேசும் பொம்மைகள்
- வண்ணத்துப்பூச்சி வேட்டை
- கம்ப்யூட்டர் கிராமம்
- கொலை அரங்கம்
- ஓடாதே!
- திசை கண்டேன் வான் கண்டேன்
குறும் புதினங்கள்
- தீண்டும் இன்பம்
- குரு பிரசாத்தின் கடைசி தினம்
- ஆகாயம்
- காகித சங்கிலிகள்
- மண்மகன்
- மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
சிறுவர் இலக்கியம்
சிறுகதைத் தொகுப்புகள்
சிறுகதை மற்றும் குறும் புதினத் தொகுப்புகள்
- நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
கவிதைத் தொகுப்பு
- நைலான் ரதங்கள்
நாடகங்கள்
- டாக்டர். நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
- கடவுள் வந்திருந்தார்
- பாரதி இருந்த வீடு
- ஆகாயம்
கட்டுரைத் தொகுப்புகள்
- கணையாழியின் கடைசி பக்கங்கள்
- கற்றதும் பெற்றதும் [பாகம் 1,2,3,4]"
- கடவுள் இருக்கிறாரா
- தலைமை செயலகம்
- எழுத்தும் வாழ்க்கையும்
- ஏன் ? எதற்கு ? எப்படி ?[பாகம் 1,2]
- சுஜா'''தா'''ட்ஸ்
- இன்னும் சில சிந்தனைகள்
- தமிழ் அன்றும் இன்றும்
- உயிரின் ரகசியம்
- நானோ டெக்னாலஜி
- கடவுள்களின் பள்ளத்தாக்கு
- ஜீனோம்
- திரைக்கதை எழுதுவது எப்படி?
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
- அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு - திரைப்படம்)
- காயத்ரி
- கரையெல்லாம் செண்பகப்பூ
- ப்ரியா
- விக்ரம்
- வானம் வசப்படும்
- ஆனந்த தாண்டவம்
- சைத்தான்(திரைப்படம்)
பணியாற்றிய திரைப்படங்கள்
- ரோஜா
- இந்தியன்
- ஆய்த எழுத்து
- அந்நியன்
- பாய்ஸ்
- முதல்வன்
- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
- ஜீன்ஸ்
- உயிரே
- விசில்
- கன்னத்தில் முத்தமிட்டால்
- சிவாஜி த பாஸ்
- எந்திரன்
- வரலாறு
- செல்லமே
மறைவு
உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29. பெப்ரவரி 2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.[1],[1]மேற்கோள்கள்
வெளி இணைப்பு
கள்
- WriterSujatha.com - சுஜாதாவின் இணைய பக்கம்.
- அம்பலம் (சுஜாதா நிர்வகித்த இணைய இதழ்)
- சுஜாதாவின் வாழ்க்கைக் குறிப்பு
- தமிழ் நண்பர்களில் சுஜாதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக